புதுடெல்லி: தலைநகர் டெல்லி வழியே பயணிக்கும் யமுனை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அபாய அளவை எட்டும் என கணிக்கப்பட்டிருப்பதால் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு உட்பட்ட இமய மலையில் யமுனோத்ரி என்ற இடத்தில் யமுனை ஆறு உற்பத்தி ஆகிறது. டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியே பயணித்து உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத் என்றழைக்கப்பட்ட பிரயாக்ராஜில் கங்கை நதியில் சங்கமம் ஆகிறது. இதை அடுத்து நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை மற்றும் ஹரியானா மாநிலங்களில் நிரம்பி வழியும் நீர் தேக்கங்கள் ஆகியவற்றினால் யமுனை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.