திருச்சி: தேவை மற்றும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்துடன் தமிழக அரசின் இ-சேவை மையம், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி, அரசின் இ-கவர்னஸ் முறையை செயல்படுத்துவதற்கான சிறப்பு மையத்தை திருச்சி திருவெறும்பூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், வருவாய்த் துறையுடன் தகவல் தொழில்நுட்பம் இணையும்போது தமிழகம் மேலும் பல வளர்ச்சி அடையும்.