உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ள அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. உத்தரகாசி அருகே உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் கூடிய பேய் மழை பெய்தது. இந்த பெரிய மழைக்கு 15க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சிலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணியும் முடக்கி விடப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இந்தோத்தித் எல்லை பாதுகாப்பு படையினரும் மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் ஏராளமான வீடுகளும் விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.