சென்னை: ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர் எனவே வழக்கை சட்டரீதியாகவே அவர் சந்திப்பார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவுள்ளதாகவும் கூறினார்.