ஈரோடு: பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால், கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு திண்டலில் வேளாளர் மகளிர் கல்லூரியின் ஆண்டு பொன்விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசின் நடவடிக்கையால் தான் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.