சேலம்: கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் குடிநீர்,விவசாய தேவைக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளனர். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்துதானது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து நேற்று காலை 27 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஆனாலும் அணையில் நீர் வரத்தை காட்டிலும் நீர் வெளியேற்றம் குறைவாக உள்ள நிலையில் தற்போதைய நீர் இருப்பு 87. 829 டிஎம்சியாக உள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.39 அடியாக இருக்கிறது.