×

அரக்கோணம், நகரி உள்ளிட்ட இடங்களில் இளம்பெண்களை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட சைக்கோ வாலிபர்: திடுக்கிடும் தகவல்கள்

வேலூர்: அரக்கோணம், நகரி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த பல இளம்பெண்களை கொலை செய்த சைக்கோ ஆசாமி, சடலத்துடன் உறவு கொண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி பகுதியை சேர்ந்தவர் சரோஜம்மாள்(65). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நகரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(35) என்பவரை நகரி போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் மூக்குத்தி, தாலிபொட்டு போன்ற நகைகள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், ஆனந்தனிடம் விசாரணை நடத்தினர். இதில், அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.  ஆனந்தன், அரக்கோணம் பகுதியில் ஒரு இளம்பெண்ணை அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் சடலத்துடன் உறவு கொண்டுள்ளார்.  இதையடுத்து அந்த பெண் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றார்.

ஆனால் அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இதேபோல் சரோஜம்மாளையும் கொலை செய்துவிட்டு உறவு கொண்டுள்ளார். இதையடுத்து நகரி போலீசார், அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் டிஎஸ்பி ஜெயசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார், ஆனந்தனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியை சேர்ந்த டெய்லர் நிர்மலா என்பவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. மேலும் நிர்மலா கொலை செய்யப்பட்ட சில நாட்களில் அவரது தோழியான அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் ரயிலில் அடிபட்டு இறந்தார். இந்நிலையில், இந்திராணிக்கும், ஆனந்தனுக்கும் இடையே தொடர்பு இருந்தது ெதரிந்தது.  இந்திராணிக்கும் நிர்மலாவுக்கும் இடையே பல்வேறு பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாம்.

இதனால், இந்திராணி கூறியதால் நிர்மலாவை ஆனந்தன் கொலை செய்ததும் தெரிந்தது. மேலும் அரக்கோணத்தில் பல பெண்களை கொலை செய்து சடலத்துடன் ஆனந்தன் உறவு கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, போலீசார், ஆனந்தனை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். பெண்களை கொன்று சடலத்துடன் வாலிபர் உறவு கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arakkonam, young women, murdered, along with the body relationship, Psycho young
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...