பாக். ஐஎஸ் தீவிரவாதிகள் ராஜஸ்தானில் ஊடுருவல்

ஜெய்ப்பூர்: காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு ஆகிய நடவடிக்கையால் பாகிஸ்தான் அரசும், அங்குள்ள தீவிரவாத அமைப்புகளும் ஆத்திரம் அடைந்துள்ளன. இதன் காரணமாக, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்துக்குள் பாகிஸ்தானை சேர்ந்த 5 ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.  பேருந்து, ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், தாபாக்கள், மால்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: