சென்னை: ெசன்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 130 இடங்களில் ேநற்று முன்தினம் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினர். மேலும், 15 தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 41 பிடியாணை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய 5 ரவுடிகள், வழிப்பறி மற்றும் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 78 பேர் மற்றும் ெகாலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 15 பேர் உட்பட மொத்தம் 159 குற்றப்பின்னணி உள்ள நபர்களை கைது செய்தனர்.