சென்னை முழுவதும் வழிப்பறி கொள்ளையர்கள் உட்பட 555 பேர் கைது

சென்னை: ெசன்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 130 இடங்களில் ேநற்று முன்தினம் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினர். மேலும், 15 தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 41 பிடியாணை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.  இதுதவிர கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய 5 ரவுடிகள், வழிப்பறி மற்றும் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 78 பேர் மற்றும் ெகாலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 15 பேர் உட்பட மொத்தம் 159 குற்றப்பின்னணி உள்ள நபர்களை கைது செய்தனர்.

பழைய குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 29 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் தொல்லை ஏற்படுத்திய 68 குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த 301 நபர்களையும் போலீசார் கைது செய்தனர். ேநற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையில் மாநகரம் முழுவதும் மொத்தம் குற்ற பின்னணி கொண்ட 555 பேரை போலீசார் கைது செய்தனர். உரிமம் இல்லாத 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: