திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே காதலனுடன் ஓடிய மகளை அழைத்து வந்து கொலை செய்துவிட்டு தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள புதுவைப் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (54). இவரது மனைவி கீதா(53). இந்த தம்பதியின் மகள் நயனா (24).இவர் பெங்களூர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். அவரது பெற்றோர் அவ்வப்போது பெங்களூர் சென்று மகளை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நயனா திடீரென மாயமானார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இது குறித்து சுபாஷ் ஞாரைக்கல் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கோவாவில் உள்ள ஒரு லாட்ஜில் நயனா வாலிபர் ஒருவருடன் தங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு திரும்பி வந்தனர்.