திருமலை: ஆந்திராவில் ரயில் பெட்டிகளில் இருந்து கழன்ற இன்ஜின் 5 கி.மீ. தூரத்துக்கு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜின் திடீரென்று பெட்டிகளில் இருந்து கழன்று சுமார் 5 கிமீ தூரம் சென்றது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பெட்டிகளை நடுவழியில் நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.