×

சினிமா படப்பிடிப்பு நிறுவனத்தில் 2.5 கோடி மதிப்புள்ள கேமரா, லென்ஸ் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை விருகம்பாக்கம் குமரன் காலனியில் சினிமா படப்பிடிப்பு கருவிகள் வாடகைக்கு விடும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளர் ஷாஜகான் (45) நேற்று முன்தினம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது நிறுவனத்தில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள அதிநவீன கேமரா மற்றும் லென்ஸ்கள் மாயமாகி இருந்தது. உடனே நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது, வழக்கமாக கேமராக்களை வாடகைக்கு எடுத்து செல்லும் முகமது சபீர் என்பவர், கேமரா மற்றும் லென்ஸ் எடுத்து சென்றது தெரியவந்தது. அவருக்கு போன் செய்த போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று எனக்கு தெரியவில்லை. எனவே, முகமது சபீரிடம் இருந்து கேமரா மற்றும் லென்ஸை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கேமராவை எடுத்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Tags : Cinema shooting, camera, lens theft, police web
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...