திருப்பதி: திருப்பதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து ₹9 லட்சம் மதிப்பிலான தங்கம் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பதி குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜ்மோகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குற்றச் சம்பவங்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது. அப்போது ராமானுஜ ஜங்ஷன் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சென்னை போரூர் பகுதியை சேர்ந்த பாசுவ ராஜு என்கிற ராஜு(41) என்பதும் திருப்பதி மற்றும் சித்தூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வீடுகள், நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் திருடியதும் தெரியவந்தது.