திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய், பக்ரைன், சார்ஜா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சுங்க இலாகா மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டும் தங்கம் கடத்துவது குறையவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணூர் விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணியில் இருந்தே கண்ணூருக்கு வந்த அனைத்து சர்வதேச விமான பயணிகளிடமும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.