விபூதி பாக்கெட்டில் பெண் கடத்தி வந்த தங்கம் பறிமுதல்

திருச்சி: விபூதி பாக்கெட்டில் திருப்பூரை சேர்ந்த பெண் பயணி கடத்தி வந்த 10லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருப்பூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் பயணி, விபூதி பாக்கெட்டில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 10லட்சம் மதிப்புள்ள 270 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: