புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடிதம் கொடுத்துள்ளனர். புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக தகவல் பரவியது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுகுமாறன், டிபிஆர் செல்வம், ஜெயபால், அதிமுக அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று மதியம் சபாநாயகர் அறைக்கு சென்றனர்.அங்கு சட்டசபை செயலர் வின்சென்ட்ராயர், சபாநாயகரின் தனி செயலர் சந்திரமோகன் ஆகியோரை சந்தித்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை கொடுத்தனர்.