குளித்தலை அருகே அமைச்சரின் அண்ணன் வீட்டில் கொள்ளை

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். அமைச்சர் வளர்மதியின் அண்ணன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி கஸ்தூரி(48). தனது மூன்றாவது மகள் ரம்யாவை பிரசவத்திற்காக கடந்த 15ம் தேதி கஸ்தூரி குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குழந்தை பிறந்த நிலையில் மருத்துவர்கள் உடனடியாக திருச்சி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும் என கூறியதால் கஸ்தூரியும், மூத்த மகள் சரண்யாவும் குழந்தையை எடுத்துக் கொண்டு திருச்சிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி சரண்யா, வீட்டுக்கு சென்று வருவதாக கூறி புதுப்பாளையம் சென்றுள்ளார். வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் முன்பக்க அறை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்த கதவை உடைத்து பீரோவில் இருந்த 2 லட்சம், மற்றொரு அறை பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

Related Stories: