சீர்காழி: தேர்தலில் பறக்கும்படை குழுவுக்கு பயன்படுத்திய வாகனங்களுக்கு வாடகை தொகை நிலுவையில் இருப்பதால் வாகன டிரைவர்கள் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மக்களவை தேர்தலையொட்டி சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளுக்கு சென்று கண்காணிக்கவும், பறக்கும் படை குழுவினர்களுக்காக வாடகை வாகனங்கள் சீர்காழி தாசில்தார் அலுவலகம் மூலம் ஒப்பந்தம் பேசப்பட்டு இயக்கப்பட்டது. தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் சுமார் 7 வாகனங்களுக்கு வாகன வாடகை தொகை தரப்படவில்லை. ஒரு வாகனத்திற்கு ₹60 ஆயிரம் வரை வாடகை தரப்பட வேண்டும் என டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.