பரமக்குடி: பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை சந்திப்பில் டூவீலர் மீது கார் மோதி, 2 மகள்கள், தந்தை உட்பட 4 பேர் பலியாயினர். ராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தை சேர்ந்த தொழிலதிபர் உஸ்மான் (55). இவரது மகள்கள் ஹைனுல் அரசியா, தஸ்லீமா பானு ஆகியோர் திருமணமாகி மலேசியாவில் வசித்து வந்தனர். அங்கு ஓட்டல் நடத்தி வந்தனர். இவர்கள் நேற்று மலேசியாவில் இருந்து விமானத்தில் மதுரை வந்தனர். இவர்களை அழைத்து செல்ல, உஸ்மான் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கிருந்து 2 மகள்கள் மற்றும் மருமகன்களுடன் ராமநாதபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.