திருமலை: திருப்பதி தேவஸ்தான வனப்பகுதியில் பொருத்திய சிசிடிவி கேமராவில் வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதி சேஷாச்சலம் மலைத்தொடர் 82,500 எக்டர் பரப்பளவில் உள்ளது. இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக 2,700 எக்டர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை பாதுகாப்பதோடு பல அரிய வகை மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தேவஸ்தான வனத்துறை சார்பில் வன விலங்குகளை அடையாளம் காணும் விதம் விதமாக சந்தனமர வனம், குமாரதாரா, பசுப்புதாரா அணைக்கு செல்லும் சாலை, தர்மகிரி, பாபவிநாசம் மற்றும் சேஷாச்சல மலை தொடரில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. இந்த கேமரா முன் விலங்குகள் சென்றால் அதனை படம் பிடிக்கும் விதமாக சென்சார் வைக்கப்பட்டது.