2வது சீசனுக்கு தயாராகும் ஊட்டி ரோஜா பூங்கா: புல்வெளியை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

ஊட்டி: ஊட்டியில் 2வது சீசனுக்காக ரோஜா பூங்காவை தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகையான ரோஜா செடிகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன. ஆண்டு தோறும் மே மாதம் கோடை சீசன் போது ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படும். இதற்காக, பிப்ரவரி மாதம் கவாத்து செய்யப்பட்டு, மே மாதத்தின்போது புதிய செடிகளில் பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள், ஆனால், இரண்டாவது சீசனுக்கு, கவாத்து செய்யப்படுவதில்லை. அேதபோல் கண்காட்சியும் நடத்தப்படுவதில்லை. அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் வண்ணம் செடிகளுக்கு உரமிட்டு தயார் செய்யப்படும்.

மேலும், அங்குள்ள புல் மைதானங்கள் சீரமைக்கப்படும். ரோஜா செடிகளில் இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அனைத்து செடிகளிலும் பூக்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இதற்காக, தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் பூங்காவில் உரமிடும் பணிகள், பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் மற்றும் புல் மைதானங்களை சீரமைக்கும் பணிக்ள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு மேல் பூக்கள் பூக்க வாய்புள்ளதாக ரோஜா பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: