ஊட்டி: ஊட்டியில் 2வது சீசனுக்காக ரோஜா பூங்காவை தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகையான ரோஜா செடிகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன. ஆண்டு தோறும் மே மாதம் கோடை சீசன் போது ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படும். இதற்காக, பிப்ரவரி மாதம் கவாத்து செய்யப்பட்டு, மே மாதத்தின்போது புதிய செடிகளில் பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள், ஆனால், இரண்டாவது சீசனுக்கு, கவாத்து செய்யப்படுவதில்லை. அேதபோல் கண்காட்சியும் நடத்தப்படுவதில்லை. அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் வண்ணம் செடிகளுக்கு உரமிட்டு தயார் செய்யப்படும்.