சேலம் : சேலம் மாவட்டம் அபிநயம் கிராமத்தில் அணைக்கட்டு மற்றும் ஏரி புனரமைக்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அபிநவம் அணைக்கட்டு மற்றும் ஏரியில் ரூ.27 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முட்புதர்களை அகற்றி 800 மீட்டர் நீளத்திற்கு ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.