சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மைய இயக்குநர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.