×

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும்: ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் அறிவிப்பு

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும் என பாரத் ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார். பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம்.கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த யோனோ கேஷ் அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதில் 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும் என அறிவி்க்கப்பட்டுள்ளது. பணம் எடுக்க வேண்டும் என்றால் யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு எண் அனுபபி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஏ.டி.எம்.களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. ந்த வசதியை நாடு முழுவதிலும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் தற்போது பயன்படுத்தராம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் இந்த வசதி கொண்டுவரப்படும் என பாரத் ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்தார்.


Tags : State Bank,President,Rajnees Kumar,Yono facility,ATMs, 5 years
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...