டெல்லி : சென்னை உள்ளிட்ட பல்வேறு உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற ஃபேஸ்புக் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைத்தளத்தை குற்றம் சாட்ட முடியுமா ? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் குற்றம் நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.