சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் காவலர் மீது தாக்குதல்

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள  அரசு மருத்துவமனையில் பெண் காவலர் ஷீபா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் கூட்டமாக நுழைந்தவர்களை வெளியேற சொன்னதால் ஷீபா தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிகளான அசோக், பரிமளா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: