சீர்காழி: தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் கேது கோயிலில் வழிபாடு செய்தபின் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். அரசு கேபிள் இணைப்பை தராமல் தனியார் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸை மக்களிடம் திணித்தாள் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.