டிஸ்பூர் : அசாமில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேசிய குடியுரிமை பதிவேட்டின் வரைவு அறிக்கை இந்த மாதம் 31ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனால் வன்முறைகள் ஏற்படாத வண்ணம் தடுக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்ட உள்ளனர். அசாமில் சட்டத்திற்கு புறம்பாக பலர் குடியேறி உள்ளனர் என்பது மத்திய அரசின் குற்றச் சாட்டாக உள்ளது. அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. தேசிய குடியுரிமை பதிவேட்டில் இருந்து கடந்த ஆண்டு 40 லட்சம் பேரின் பெயர் நீக்கப்பட்டது பெரும் எதிர்ப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.