சேலம்: முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டம் மூலமாக ஒரே நாளில் 4,062 மனுக்கள் பெறப்பட்டு அதில் 53 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முதலமைச்சரிடம் தெரிவிக்க ஏதுவாக முதலமைச்சர் சிறப்பு குறைதீர்வு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதன் தொடக்க விழாவானது சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்றது. திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏராளமானோரிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் மனுக்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து முதலமைச்சர் சிறப்பு குறைதீர்வு கூட்டம் மூலம் தங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது என பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.