புதுடெல்லி: மத்திய ஆயுத போலீஸ் படையினர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, சாஸ்திர சீமா பால், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் ஓய்வு வயதில், வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரின் ஓய்வு வயது 60 ஆகவும், மற்ற படையினரின் ஓய்வு வயது 57 ஆகவும் இருந்தது.