பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் பெண் ஒருவரை விடுதியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய விவகாரத்தில், உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில் பெண் விடுதி கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சட்டீஸ்கரில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியின் கண்காணிப்பாளராக சுமிலா சிங் இருந்து வந்தார். அங்கு பெண் ஒருவர் தனது 3 மாத குழந்தையுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி சுமிலா சிங்கின் கணவர் ரங்லால் சிங், அந்த பெண்ணை அறையில் இருந்து தர, தரவென்று இழுத்து சென்று வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.