மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஞானசுந்தரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் சிந்தாஸ் உள்ளிட்ட 4 மீனவர்கள், கடந்த ஜூலை 4ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மறுநாள் ஆகியும் கரை திரும்பவில்லை. என் கணவர் சடலமாக, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். 4 நாட்கள் உயிருக்கு போராடிய பின்பே இறந்துள்ளார். இதற்கு பேரிடர் மேலாண் குழுவின் அலட்சியமே காரணம். எனவே, எனது கணவர் இறப்பிற்கு இழப்பீடாக, 20 லட்சம் வழங்கவும், எனக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.