சென்னை: டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணி தேர்விற்கான கீ-ஆன்சரை நிர்வாகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொகுதிப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு நடத்தி பணி வழங்க நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, இத்தேர்விற்கு 8 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்தனர். இதேபோல், தேர்விற்கு விண்ணப்பத்தவர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அதிகாரிகளை நியமித்து சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது.