திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் மின்விசிறி கழன்று விழுந்ததில் தாய், மகள் காயம் அடைந்தனர். திருச்சி அடுத்த சர்க்கார்பாளையத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி (54). இவரது மகள் அனுஜெய₹ (24). மாற்றுத்திறனாளி. கடந்த சில நாட்களுக்கு முன் அனுஜெய₹க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் எப்எம் 3 வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் ஜேம்ஸ்மேரி உடன் இருந்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி மகளுக்கு உணவு கொடுத்து அருகில் அமர்ந்து ஜேம்ஸ்மேரியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேலிருந்து மின்விசிறி அறுந்து கட்டிலில் இருந்த ஜேம்ஸ்மேரி தலையில் விழுந்தது. மின்விசிறியின் இறக்கை அனுஜெய₹ மீது பட்டு கிழித்தது. இதை பார்த்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். காயமடைந்த ஜேம்ஸ்மேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜேம்ஸ்மேரி திடீரென தலை பாரமாக இருப்பதாக டாக்டரிடம் கூறினார். பரிசோதித்த டாக்டர்கள் உள்நோயாளியாக சேர்ந்தால் தான் சிகிச்சை மற்றும் ஸ்கேன் எடுக்க முடியும் என்றனர். மேலும் ஸ்கேன் எடுப்பதற்கு ₹500 கேட்டனர். இது பற்றி அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று அங்கு புதிதாக மின்விசிறி ேபாடப்பட்டதோடு ஜேம்ஸ் மேரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.