மதுரை: நெல்லை மாவட்டம், கூனியூரை சேர்ந்த சுந்தரவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லையிலுள்ள பிராஞ்சேரிகுளம் மற்றும் சுப்ரமணியபுரம் குளம் ஆகியவற்றில் தூர்வாரும் பணி நடந்தது. அரசு விதிப்படி கண்மாய் மற்றும் குளங்களை தூர்வாரிய பின் கரைகளை பலப்படுத்தி சமன் செய்ய வேண்டும். கரையை முக்கால் அடி உயர்த்தி பலப்படுத்த வேண்டும். ஆனால் தற்போது நடந்த தூர்வாரும் பணியை, எங்கும் முறையாக விதிகள் பின்பற்றவில்லை. ராமநாதபுரம், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் நடந்த தூர்வாரும் பணிகளிலும் இதே போன்று பெயரளவிலேயே பணிகள் நடந்துள்ளன. தூர்வாரும் பணிகள் முடிந்த பிறகு அவற்றின் தரத்தை, பல்கலைக்கழக பொறியாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை எங்கும் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.