சென்னை: சிறப்பு துணைத் தேர்வு எழுதியோருக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றுகள் வினியோகிக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் பங்கேற்றவர்களுக்கு ஜூலை 12ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகள் ஆன்லைன் மூலம், பதிவிறக்கம் செய்யலாம். இதையடுத்து, 21ம் தேதி (நாளை) முதல் மாணவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.