சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் இந்த மாதத்தில் இருந்து திடீரென 75 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் 3 லிட்டர் மண்ணெண்ணெய் பெற்று வந்தவர்களுக்கு இந்த மாதம் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, உளுத்தம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, சிலிண்டரே இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 6 லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு சிலிண்டர் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் மண்ெணண்ணெய் 13 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதே மண்ணெண்ணெய் தனியார் கடைகளில் ரூ.40 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசு தமிழக அரசுக்கு மண்ணெண்ணெய் மானியத்தை குறைத்துவிட்டதால் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் அனைவருக்கும் சரிவர மண்ெணண்ணெய் வழங்கப்படுவதில்லை. ஆனாலும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு கடந்த மாதம் வரை 50 சதவீதம் மண்ணெண்ணெய் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த மாதம் திடீரென 75 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சதவீதம் மட்டுமே தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை செய்து வருகிறது.