மூழ்கும் காங்கிரஸ் கப்பலை கைவிட்ட கேப்டன் ராகுல் : சிவராஜ் சிங் கிண்டல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கைக்கான இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில் உறுப்பினர் சேர்க்கை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான மபி முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசியதாவது: மூழ்கும் கப்பலை தனது கடைசி மூச்சு உள்ள வரை காப்பாற்ற முயற்சி எடுக்கும் கேப்டன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு மூழ்கும் காங்கிரஸ் கப்பலின் கேப்டன் முதலில் குதித்து விட்டார். இடைக்காலத் தலைவராக சோனியா பொறுப்பேற்றுள்ளார். இது அகமதுவின் தொப்பி முகமதுவின் தலையிலும், முகமதுவின் தொப்பி அகமதுவின் தலையிலும் இருப்பதை போன்று உள்ளது.

காங்கிரஸ் வாரிசு அரசியலில் இருந்து வெளிவராமல், ஒரு குடும்பத்தினரிடமே அடிமைப்பட்டு கிடந்தால் மலராது. ஆட்சி பொறுப்பேற்ற 10 நாட்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாவிட்டால் முதல்வர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் எட்டு மாதங்கள் கடந்த நிலையில், தலைவரே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: