காஷ்மீரில் அமைதி நிலவ பிரார்த்தனை செய்யுங்கள் : மம்தா டிவீட்

கொல்கத்தா:  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பதிவில், “ஒரு சமயத்தில் மனித உரிமைகள் மீறலுக்காக நான் சாலைகளில் போராட்டம் நடத்தியுள்ளேன். 1995ம் ஆண்டு போலீஸ் காவலில் உயிரிழப்புக்களை எதிர்த்து மனித உரிமைக்காக 21 நாட்கள் போராட்டம் நடத்தினேன். இன்று (நேற்று) உலக மனிதாபிமான தினம். காஷ்மீரில் மனித உரிமைகள் மொத்தமாக மீறப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் மனித உரிமை மற்றும் பிராந்தியத்தில் அமைதி நிலவ பிரார்த்திப்போம்”  என்று கூறியுள்ளார்.

Related Stories: