கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், மனித உரிமை செயல்களில் ஈடுபட்ட ராணுவ கமாண்டர், தற்போது இலங்கை ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ராணுவத்தின் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் செனாநாயகேயின் பதவிக் காலம் முடிகிறது. இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதனால் இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா(55) என்பவரை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுடன் இறுதிக்கட்டப் போர் நடந்தபோது, ராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார்.