புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 36 இரண்டடுக்கு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். புதிய எம்பிகளுக்காக நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் 36 இரண்டடுக்கு வீடுகள் கட்டப்பட்டு வந்தது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.