அணைக்கட்டு: வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழைக்காரணமாக சிறுமிகள் உள்பட பரிதாபமாக இறந்தனர். மேலும் 1000 கோழிகளும் இறந்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கிராமம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(37). இவரது மனைவி பா. இவர்களது மகள்கள் ஹரிணி(6), பிரித்திகா(3). மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வேல்முருகனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தோண்டப்படிருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்று விவசாய நிலத்தில் ஹரிணியும், பிரித்திகாவும் பள்ளம் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தவறி பள்ளத்தில் விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம், நேற்று சிறுமிகளின் வீட்டுக்கு சென்று அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.