மதுரை: தமிழகத்தில் நோட்டரி வக்கீல் நியமனத்தில் நேர்காணலில் வழங்கப்பட்ட மதிப்பெண் குறித்து மத்திய சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை சோழவந்தானை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ஓ.பி.சி பிரிவில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நோட்டரி வக்கீல் நியமனத்துக்காக விண்ணப்பித்தேன் என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் நியமன பட்டியலில் தனது பெயர் இல்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். நோட்டரி பப்ளிக் வக்கீல் நியமனத்தில் நேர்காணலில் எந்த முறை பின்பற்றப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.