திருச்சி: திருச்சி ராம்ஜிநகர் அருகே கீழப்பழுதூரில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.