மதுரை: கொடைக்கானலில் சீசன் நேரங்களில் மின்சார வாகனங்களை பயன்படுத்த உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது. சீசன் காலங்களில் கொடைக்கானல் மலை அடிவாரத்திலேயே சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம் எனவும், கொடைக்கானலில் ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமிருக்கும் இயற்கையையாவது பாதுகாக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்கள் இல்லை என்பதை உறுதி செய்து உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கையளிக்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.