×

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மக்களின் உணர்வுகளை மதித்து முதல்வர் பழனிசாமி மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளார்: அமைச்சர் செங்கோட்டையன்

புதுடெல்லி: விளையாட்டுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் நிலுவையில் இருக்கும் மத்திய அரசு நிதியை உடனே வழங்க கோரிக்கை விடுத்தேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மக்களின் உணர்வுகளை மதித்து முதல்வர் பழனிசாமி மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளார். மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், கிரண் நிஜூவையும் சந்தித்து தமிழகத்துக்கு வரவேண்டிய திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தேன் என்று அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : New Education Policy, Chief Minister Palanisamy, Central Government, Minister Sengottaiyan
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...