சென்னை: மக்களவை தேர்தலில் அமமுகவின் தோல்விக்கு நானே முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் தோல்விக்கான காரணம் வெளிவரும், யாரும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலில் சிலர் பணியாற்றாததால் அமமுக தோல்வி அடைந்ததா என்பதை வரும் தேர்தலில் பார்ப்போம் என்று கூறியுள்ளார்.