மதுரை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, திருநெல்வேலியை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை செப் 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.