சேலம்: 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பாலமலையில் உள்ள 11 குக்கிராமங்களுக்கு புதிய மின் இணைப்புகளை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற வகையில் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றும் என்று அவர் கூறியுள்ளார்.