3 மாதங்களில் மழைநீர் சேகரிப்பை நிறுவாவிட்டால், நோட்டீஸ் வழங்கி அரசு நடவடிக்கை எடுக்கும்: எஸ்.பி.வேலுமணி

சென்னை: 3 மாதங்களில் மழைநீர் சேகரிப்பை நிறுவாவிட்டால், நோட்டீஸ் வழங்கி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு ஆய்வு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொழில் நிறுவனங்கள் வீடு உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும். எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின்போது தண்ணீரை சேமிக்க மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் என்று கூறியுள்ளார்.

Related Stories: